Header Ads



5 வருடங்களுக்கு அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது - மைத்திரி - ரணில் உறுதி


அடுத்த 5 வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது எனவும் திட்டமிட்டபடி அரசாங்கத்தின் சகல வேலைத் திட்டங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மொரகஹாகந்த களுகங்கை நீர்த்தேக்கத்தில் புனித பொருட்களை பிரதிஷ்டை செய்யும் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் அங்கு புனிதப் பொருட்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன் இந்த நிகழ்வில் அமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட எம்.பி.க்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.