Header Ads



ஈரானுக்கு, இலங்கை கொடுக்கவேண்டிய 37 பில்லியன்


மசகு எண்ணெய் தொடர்பில் இலங்கையால், செலுத்தப்படாத 37 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் என்று ஈரான் விடுத்த வந்த கோரிக்கைக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கிடையில் தெஹ்ரானில் இடம்பெற்ற சந்திப்பின்போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலுவை கொடுப்பனவை செலுத்துவது தொடர்பில், பல்வேறு வழிகள் ஆராயப்பட்டுள்ளன.

இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்து, ஈரானியர்கள், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள செய்யும் திட்டம் இதில் ஒன்றாகும்.

ஈரானிய உதவியுடன் மீண்டும் சப்புக்கஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இயக்குவது இரண்டாவது திட்டமாக பேசப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.