Header Ads



பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 2 இலங்கையர்களும் பத்திரமாக மீட்பு (படம்)


பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கபே ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் எந்தவித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளதாக, டாக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல விடுதி ஒன்றைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர்.

இரண்டு இலங்கையர்களும் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர்.

காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பிணையக்கைதிகளை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் மூலம் தடுத்து வைக்கப்பட்ட 20 பணயக்கைதிகளில் 12 பேர் பங்களாதேஷ் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அதில் இரு இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன், ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, குறித்த உணவகம் அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள் உள்ளிட்ட உயர்மட்டத்தினர் அடிக்கடி வந்து போகும் ஒரு இடம் என்பது தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.