Header Ads



UNP யில் சங்கமமான பொன்சேக்கா - களனித்தொகுதி அமைப்பாளராக நியமனம்


ஐக்கிய தேசியக் கட்சியின் களனித்தொகுதி  அமைப்பாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று காலை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார்.

இதன்பிரகாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார். 

சிறிகொத்தாவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.