Header Ads



ஞான­சாரரை எதிர்க்கும், முஸ்லிம்களுக்கு எதி­ராக களமிறங்குவோம் - சிங்­கள ராவய எச்சரிக்கை

-விடிவெள்ளி ARA.Fareel-

முஸ்லிம் அமைப்­பு­களும் அர­சியல் தலை­மை­களும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முறைப்­பா­டு­களை முன்­வைத்து வழக்கு தொடர்­வதை எதிர்த்து நாட­ளா­விய ரீதியில் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க பௌத்த அமைப்­புகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

மஹி­யங்­க­னையில் ஞான­சார  தேரர் ஆற்­றிய உரையில் பெளத்த கொடி­யையும் வெசாக் கூடு­க­ளையும் எரித்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மெ­னவே வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அளுத்­க­மையில் பன்­ச­லையும் பௌத்த குரு ஒரு­வரும் முஸ்­லிம்­களால் தாக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மையே வன்­செ­ய­லுக்கு கார­ண­மாக அமைந்­தது. இந்­நி­லைமை மஹி­யங்­க­னையில் ஏற்­ப­டா­தி­ருக்க பொலிஸார் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றே அவர் தனது உரையில் கூறி­யுள்ளார்.

ஞான­சார தேரரின் மஹி­யங்­கனை உரை தொடர்­பாக கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.  தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், 

'பௌத்த கொடி எரிப்­பினை எதிர்த்து போஸ்­டர்கள் ஒட்­டி­ய­தற்­காக சிங்­க­ள­வர்களைக் கைது­செய்து விளக்­க­ம­றி­யலில் வைத்துள்ளது அநீ­தி­யாகும்.

பௌத்­தர்கள் கருணை மற்றும் சமா­தா­னத்தை விரும்­பு­ப­வர்கள். அவர்கள் பொறு­மை­யாக இருக்­கி­றார்கள். முஸ்­லிம்கள் தமது தவ­றான செயற்­பா­டு­க­ளினால் அவர்­களை உணர்ச்­சி­வ­சப்­ப­டுத்­தக்­கூ­டாது.

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக வழக்­குத்­தாக்கல் செய்­யப்­போ­கிறோம் என்று அவரைப் பய­மு­றுத்­து­வதால் எந்தப் பலனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. பௌத்­தர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களின் போது அமைதியாக இருக்க முடியாது.

ஆட்சியாளர்கள் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் நடுநிலையாக செயற்படாவிட்டால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றார். 

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Dai madaya engada mosque kukku kallala erirathu, kattumanathukku thadai vithippathu, halal (basis of quality output for humans’ benefits) thadaisai endu vanjagathoda nadakkurathu, muslimkal ra porulatharathula thadai sairathu and gnasera adavadithanam pannunathu ellam onkku thappa theriyala sattathin mun niruthurathukku.

    appa eppaddida ne amathiya virumpurathu endu solla mudium.

    ReplyDelete
  3. We have to send to the mental hospital that is suitable place you all thero

    ReplyDelete

Powered by Blogger.