Header Ads



சம்பிக்க தப்பினார்

ராஜகிரிய விபத்து சம்பவம் தொடர்பில்  போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவை சந்தேக நபரென அறிவிக்க முடியாதென கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணை இன்று (29) நீதிமன்றத்தில்  எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்சூரிய பிறப்பித்துள்ளார்.

மேலும் குறித்த  விபத்தின் போது வாகனத்தை செலுத்தியது, துஷித கெலும் குமார என்ற நபர் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக நீதவான் இதன்போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.