கொழும்பில் கடும் மழை - வீதிகள் நீரில் மூழ்கின
கொழும்பு நகருக்கு நுழையும் பிரதான சந்தியான தும்முல்லை நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.
இந்த பாதை ஊடாக செல்ல முற்பட்ட பல வாகனங்கள் இடைநடுவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆமர்வீதி, பஞ்சிக்காவத்தை, தும்முல்ல ஆகிய பகுதி வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை ஆமர்வீதி, பஞ்சிக்காவத்தை பகுதி வீதிகளில் தற்போது நீர் வடிந்தோடியுள்ளதாகவும் சற்று முன் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Post a Comment