Header Ads



மஹிந்தவிற்கு தெரியாமலேயே, பசில் ராஜபக்ஸவை பிரதமராக்க முயற்சி - அமைச்சர் பீ.ஹரிசன்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவை பிரதமராக்கும் சூழ்ச்சித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தெரியாமலேயே பசில் ராஜபக்ஸவை பிரதமராக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஸவின் அண்மைய நடவடிக்கைகள்  ராஜபக்ஸ குடும்பத்திற்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பசில் ராஜபக்ஸவின் நடவடிக்கைகளினால் கூட்டு எதிர்க்கட்சியில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மே தினத்தின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியில் நேரக்குண்டு வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.