Header Ads



40 தொலைபேசிகளை திருடிய, 2 மாணவர்களுக்கு பிணை

மாத்தறை பிரதேச பாடசாலை ஒன்றின், விளையாட்டு அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த 40 தொலைபேசிகளை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மாத்தறை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி யுரேஷா டி சில்வா இனால் இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

அதன்படி இரு மாணவர்களும் 7500 ரூபா ரொக்கம் மற்றும் 02 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையில் உயர் தரத்தில் படிக்கும் இரு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

No comments

Powered by Blogger.