Header Ads



வஸீம் தாஜு­தீனின் படு­கொலை - கடுப்பாகிய நீதிபதி


-Vi-

பிர­பல ரக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை விவ­கா­ரத்தில் சாட்­சி­களை மறைத்­தமை தொடர்பில் கைதான முன்னாள் நார­ஹேன்­பிட்டி குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி மீதான வழக்கு விசா­ரணை நேற்று புதுக்­கடை நீதிவான் நீதி­மன்ற வளா­கத்தின் பொலிஸ் காவ­ல­ர­ணி­லேயே இடம்­பெற்­றது.

நேற்று போயா விடு­முறை என்­பதால் புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றவளா­கத்தில் வழக்கு விசா­ர­ணைக்கு என 9 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி திலிண கமகே கட­மையில் இருந்தார்.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்ட பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரே­ராவை நேற்று மன்றில் ஆஜர் செய்­வ­தாக இருந்­தது.

இது தொடர்பில் நீதிவான் திலின கம­கே­வுக்கும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் காலை முதல் பி.ப. 3.00 மணி­வரை அவரும் தனது 9 ஆம் இலக்க நீதி­மன்றில் இருந்தார். எனினும் சந்­தேக நபர் அழைத்து வரப்­ப­டாத நிலையில் 3.00 மணிக்கு கட­மையை நிறைவு செய்த நீதிவான் நீதி­மன்­றி­லி­ருந்து செல்ல தனது காரில் பய­ணத்தை ஆரம்­பித்தார்.

இதன்­போதே சந்­தேக நப­ரான பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரே­ராவை புல­னாய்வுப் பிரி­வினர் நீதி­மன்­றுக்கு அழைத்து வந்து பொலிஸ் காவ­ல­ரணில் வைத்­தி­ருந்­தனர். 

நீதிவான் தான் செல்லும் போது இதனை அவ­தா­னித்து உட­ன­டி­யாக நீதி­மன்ற வாயிலில் காரை நிறுத்­தி­விட்டு பொலிஸ் காவ­ல­ர­ணுக்குள் சென்று வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்தார்.

"ஏன் இப்­படி அலைக்­க­ழிக்­கி­றீர்கள் இன்று விடு­முறை நாள். நாமும் கட­மையை தானே செய்­கிறோம். பி.ப. 2.00 மணிக்கு வரு­வ­தாகக் கூறி­னீர்கள். பின்னர் பி.ப. 2.15 என்­றீர்கள். பி.ப. 2.30 வரு­கிறோம் என்­றீர்கள். 5 நிமி­டங்­களில் வரு­வ­தாகக் கூறி­னீர்கள். வரவே இல்லை. இப்­போது வந்து நிற்­கி­றீர்கள்” என குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரி­களை பார்த்து கூறியவாறே வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்தார். இதன்­போது பொலிஸ் காவ­ல­ரணில் தொலைக் காட்சி செயலில் இருந்ததுடன் அதில் நிகழ்ச்சி ஒன்றும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. விசாரணையின் இடை நடுவிலேயே தொலைக்காட்சியும் நிறுத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.