Header Ads



மக்கள் வெள்ளம், திரளுவதனை தடுக்க முடியாது - விமல்


தடையுத்தரவுகளின் மூலம் எம்மை தடுக்க முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் அஞ்சி நீதிமன்றிற்கு பிழையான தகவல்களை வழங்கி சாலிகா மைதானத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் பயன்படுத்த விடாமல் தடுத்த போதிலும், மே தினக் கூட்டத்திற்கு மக்கள் வெள்ளம் திரளுவதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் சாலிகா மைதானத்திலிருந்து பேரணி நடாத்த திட்டமிட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினருடன் பேசி சில வீதிகளை பேரணிக்காக ஒதுக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.