Header Ads



ஸ்ரீலங்கள் எயார்லைன் நிறுவன, 40 வீதமான பங்கினை கட்டார் வாங்குகிறது..?

சமகால அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நட்டத்துடன் இயங்கும் ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 40% வீதமான பங்கினை கட்டார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்கவிடம் வினவிய போது, இன்னமும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

46 ஆயிரம் கோடி ரூபா வரையில் நட்டமடைந்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை நடத்தி செல்வதற்கு, அரசாங்கம் 250 டொலர் மில்லியன் வழங்க தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதனை உரிய முறையில் தயாரித்த பின்னர் அந்த வேலைத்திட்டத்தை பிரதமர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

1998ம் ஆண்டிற்குள் எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை தமது பங்கில் 40% வீதத்தை வழங்கிய நிலையில் இம்முறை 40% மற்றும் 60% வீதமான பகுதி விமான சேவை மற்றும் அரசாங்கத்திற்கு இடையில் பிரிந்து செல்லவுள்ளன.

இதேவேளை, கடந்த காலத்தில் இலங்கைக்கு வருகை தந்த கட்டார் அரசாங்கத்தின் பிரதானி, கட்டார் எயார்வேஸ் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கட்டார் எயார்வேஸ் நிறுவனம் உலகத்தில் பிரதான விமான சேவைகளுக்கு இடையில் முன்னிலையில் உள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.