Header Ads



"அரசியல் வெறுக்கும் பட்சத்தில், வீட்டுக்கு செல்வேனே தவிர UNP யில் சேரமாட்டேன்"

எனது அரசியல் வாழ்க்கை எப்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தான், அதை தாண்டி கட்சி மாறும் யோசனை கனவிலும் வந்ததில்லை, தன் உயிர் போவதும் இதிலேதான் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இன்று -30- கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த 35 வருடங்களாக கட்சியின் பல விடயங்களில் பங்கேற்றுள்ளேன், என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியும் இதில் கிடைத்ததே. எனவே, எந்த சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு செல்லமாட்டேன் என அவர் தெரிவித்தார்.

ஊடகங்களில் தான் ஜக்கிய தேசியக் கட்சியில் இணையப்போவதாக வெளியாகியிருந்தது.

குறிப்பாக வருங்காலத்தில் அரசியல் வேலை வெறுக்கும் பட்சத்தில் வீட்டுக்கு செல்வேனே தவிர எந்த சந்தர்ப்பத்திலும் தான் ஜக்கிய தேசியக் கட்சியில் சேரமாட்டேன் என அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

2 comments:

  1. All of you earn lot of property by SLFP WITH PAST GOVT.MR GROUP ALWAYS CONDOMN UNP RULLING

    ReplyDelete
  2. All of you earn lot of property by SLFP WITH PAST GOVT.MR GROUP ALWAYS CONDOMN UNP RULLING

    ReplyDelete

Powered by Blogger.