Header Ads



முட்டாள் ஆவதற்கு, முதற் தேதி தேவையில்லை..!

-Mohamed Nizous-

முட்டாள் ஆவதற்கு
முதற் தேதி தேவையில்லை
கெட்ட கொள்கைகளால்
கீழான செயல்களினால்
மற்ற நாட்களிலும்
மடையரானார் பலபேர்கள்.

பேக் ஐடி திறத்தல்
பேஷ்புக்கில் பேயாடல்
கூகிளில் தேடுதலையே
குறியாகக் கொண்டு வாழ்தல்
வட்ஸ்அப்பில் வருவதெல்லாம்
வஹி போன்று நம்பி விடல்
கிட்னியை விற்றேனும்
கிறுக்கனாய் போண் வாங்கல்
ரீலோடு அண்ணனாகி
ரெண்டு மூணு பேருக்கு
கோல் போட்டுப் பேசுதற்காய்
கொட்டிச் செலவழித்தல்.

இறைவனை மறுத்தல்.
இறந்தோரை வணங்கல்.
அரைகுறை உடுத்தல்.
அத்வைதம் பேசல்.
முறையான துஆக்கள்
முனுமுனுக்க மட்டுந்தான்.
பெறுபேறு எதனையும்
பெற்றுத்தரா என நம்பல்.
மறையோனின் அற்புதங்கள்
மா நபி வரைக்குந்தான்.
பிறகு அதுவெல்லாம்
பிதற்றல்கள் எனக் கூறல்.
குறை கண்டு பிடிப்பதற்காய்
குதர்க்கமாய் விமர்சித்தல்.
ஓரிருவர் தவறுக்காய்
உள்ள அனைவருக்கும்
சேறு பூசி விடல்.
செல்லாக் காசாக்கல்.

படிக்கின்ற காலத்தில்
பகிடி வதை மேற்கொள்ளல்.
நடிக்கின்ற கூத்தாடியை
நாயகியாய் மனம் விரும்பல்.
வெடிக்கின்ற குண்டெல்லாம்
வெறி கொண்ட முஸ்லிம் என்று
படம் காட்டும் மீடியாவை
பக்தியாய் நம்பிடுதல்.

இன்னும் இருக்கின்றன
இது போன்ற மடத்தனங்கள்
ஏப்ரல் ஒன்றிலோ
இன்னும் உள்ள தினங்களிலோ
முட்டாளாய் ஆகாதீர்
முட்டாளாய் ஆக்காதீர்.

2 comments:

  1. Need of the hour .Wellwritten lines .

    ReplyDelete
  2. We are fool by politician every day������

    ReplyDelete

Powered by Blogger.