Header Ads



அமைச்சர் ஜோன் அமரதுங்க, கைது செய்யப்படுவாரா..?

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க கைது செய்யப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

வத்தளை மாபொல பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி நடைபாதையை உடைத்தமை தொடர்பில் ஜோன் அமரதுங்க கைது செய்பய்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாம் இந்த நடைபாதையை உடைக்குமாறு உத்தரவிட்டதாக ஜோன் அமரதுங்க ஒப்புக்கொண்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் சொத்துக்கள் சட்டத்தின் அடிப்படையில் ஜோன் அமரதுங்கவை கைது செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படக் கூடுமென எதிர்பார்த்த போதிலும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்கள் உரிய முறையில் செயற்படாமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.