Header Ads



யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரீத் இக்பால் "ரத்ன தீபம்" விருது பெற்றார்


-Jan Mohamed-

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரீத் இக்பால் அவர்கள் ஊடகத்துறைக்கு வழங்கிவரும் சேவைக்காக ரத்ன தீபம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். தற்போது பானத்துறையில் வசித்து வரும் இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வரலாற்றுக் கட்டுரைகளையும் பல்வேறு பத்திரிகைகளுக்காக எழுதி வெளியிட்டுள்ளார்.

இதற்காக கண்டி கலாச்சார மையம் கண்டியில் நடத்திய விழாவில் இவருக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது. முத்தைய முரளிதரனின் தந்தை முரளிதரன் அவர்கள் இவருக்கான் பொன்னாடையை போர்த்தி கேடயம் ஒன்றை வழங்கி கௌரவித்தார். இவருக்கான சான்றுப் பத்திரத்தை டாக்டர் நிர்மலா அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

இக்பால் அவர்கள் பல்வேறு வரலாற்றுக் கட்டுரைகளின் தொடர்களை வெளியிட்டுள்ளார். நெல்சன் மன்டேலா பற்றி இவர் எழுதிய வரலாற்றுத் தொடர் பிரபல்யமானது. கடந்து மூன்று ஆண்டுகளில் பல்வேறு சிறப்பான கட்டுரைகளை இவர் வெளியிட்டிருந்தார்.

இந்த விருதை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.எல்.லாபிர் அவர்கள் முன்பு பெற்ற முதலாவது நபராவார்.


No comments

Powered by Blogger.