Header Ads



1,132 அடி ஆழத்தில், 70 அரச ஊழியர்கள் உண்ணாவிரதம் - இலங்கையில் விசித்திரம்


தொடம்கஸ்லந்த கஹட்டகஹ பகுதியில் அரச சுரங்க ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலதிக கொடுப்பனவை கோரியே 70 க்கும் அதிக ஊழியர்கள் 1,132 அடி ஆழத்தில் இருந்து ஊழியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிறுவன கணக்காய்வாளர் தமக்கு 2 தடவைகள் தொலைநகல் மூலம் அறியத்தந்ததாக கஹட்டகஹ சுரங்க தொழிலாளர்கள் சங்கத்தின் சுசந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் வாக்குறுதிகளுக்கு அமைய கொடுப்பனவுகள் வழங்காததை அடுத்தே இரண்டாவது நாளாகவும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவற்கு தலைவரை தொடர்புகொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் அவரின் கையடக்க தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுசந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் 2 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து தமது உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவுள்ளதாவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.