Header Ads



மஹிந்தவுடன் அதிகாரத்தை கைப்பற்ற, கனவு காண்பவர்களால் Unp க்கு சவால் கிடையாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அதிகாரத்தை கைப்பற்ற கனவு காணும் தரப்பினரால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித சவாலும் கிடையாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இன்று மஹிந்தவுடன் புதிய கட்சி அமைத்து வெற்றியீட்ட கனவு காணும் தரப்பினர் ஜனாதிபதி தேர்தல் பொதுத் தேர்தலின் போதும் மஹிந்தவுடன் இருந்து தோல்வியடைந்தவர்களாகும்.

எனவே அவர்கள் மஹிந்தவுடன் ஒன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை.

புதிய கட்சி அமைத்தாலும் இவர்களின் கொள்கைகளும் எண்ணங்களும் மாறப்போவதில்லை.

ஒன்றாக தேர்தலில் களமிறங்கி தோல்வியடைந்ததனை மறந்து விட்டு இவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.

நிறைவேற்று அதிகாரம் நாடாளுமன்ற அதிகாரம் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரம் காணப்பட்ட போது மஹிந்தவை தோற்கடித்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிநச்தவை தோற்கடிப்பது சவால் மிக்கதல்ல.

தொகுதிவாரி விகிதாசார அல்லது எந்தவொரு முறையிலும் தேர்தலை எதிர்நோக்கத் தயார்.

மக்களின் ஆணையை பொய்களினால் மூடிமறைக்க முடியாது என லக்ஸ்மன் கிரியல்ல கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.