Header Ads



இரட்டைக் குழுந்தைகளுடன் பதக்கம் வென்று, இலங்கைக்கு பெருமை சேர்த்த இலங்கை பெண்

தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர் ப்பமடைந்து இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இலங்கை வீராங்கனை தனது விடாமுயற்சியால் பதக்கம் வென்று தனது தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனையே தெற்காசிய விளையாட்டு போட்டியில் குறிபார்த்து சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

குறித்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்துள்ளார். இருப்பினும் தனது விடாமுயற்சியில் தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவ்வாறு அவர் போட்டிக்குத் தயாரகிக் கொண்டிருக்கும் வேளையில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக நாட்டை விட்டு வீரர்கள் குஹாத்திக்கு புறப்பட தயாராக இருந்த வேளையிலும் அவரது இரட்டைக் குழந்தைகளுக்கு விசா கிடைத்திருக்கவில்லை.

இந்நிலையில் விளையாட்டமைச்சின் தலையீட்டின் பின்னர்  அவரது இரட்டைக் குழந்தைகள் மற்றும் கணவருக்கு இந்தியா செல்வதற்கு விசா கிடைத்த நிலையில் அவர் வெண்கலப் பதக்கமொன்றையும் வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



1 comment:

  1. Great achievement! Congratulations Ubeksshika (sorry if I made mistakes in spelling)We all are proud of you!

    ReplyDelete

Powered by Blogger.