Header Ads



ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு, மன்னிப்பு இல்லை - பாராளுமன்றத்தில் ரணில் சபதம்

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று -10- உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவர் தெரிவித்துள்ளார்.

பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடனும் சுயாதீனமானதுமான முறையில் நடத்தப்படுகின்றது.

ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவில்லை.

எவ்வாறெனினும் முழு அளவில் விசாரணைகளை நடாத்த போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. மஹீநத குடும்பம் தவிர

    ReplyDelete
  2. ஆனால் அரசியல் உங்கள் ஐ.தே.க கட்சியின் ஆதாயத்திற்காக வேண்டுமென்றே காலத்தைக் கடத்திக்கொண்டிருப்பது குற்றவாளிகளுக்குத்தானே வாய்ப்பினை அதிகரிக்கும்..?

    ReplyDelete
  3. சிறையில் அடைப்பதில் பலனில்லை. திருடியவை அனைத்தும் திரும்ப பெறப்பட வேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் போன்று குறிப்பிட்ட காலத்துக்கு இலவசமாக சமூக சேவை செய்யும்படி தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்தண்டனைதான் அவர்கள் மக்களுக்கு இழைத்த குற்றத்தை ஈடு செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.