Header Ads



"மஹிந்தவைப் பின்பற்றி முன் செல்லமுடியும் என நினைத்தால், அது கனவாக அமைந்துவிடும்"

எதிர்க்கட்சியினரின் கூட்டணி அமைக்கும் முயற்சி தொடர்பில் இன்று அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் பி. ஹரிசன் கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

மஹிந்த ராஜபக்ஸ என்பவர் தனி ஒருவராவார். அவர் ஒரு கட்சி அல்ல. மஹிந்த ராஜபக்ஸவைப் பின்பற்றி முன்னோக்கிச் செல்ல முடியும் என நினைத்தால் அது கனவாக அமைந்துவிடும். இவர் மொட்டு சின்னத்தில் அல்லது தாமரை சின்னத்தில் வந்தாலும் முடியாது. நான் நினைக்கிறேன் வாளி சின்னமே இவருக்கு​ பொருத்தமாக இருக்கும். அவ்வாறில்லாவிடின் புதிதாக ஒன்றும் செய்ய முடியாது. இறுதியில் மலர் மொட்டு முறிந்து கீழே விழும் வரை அவர்களுக்குத் தெரியாது. மைத்திரிபாலவின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இன்னும் ஓரிரு வருடங்களில் நாட்டு மக்களுக்குப் புரியும். அதிகளவில் சத்தமில்லாவிட்டாலும், வேலைத்திட்டங்கள் எவ்வாறு என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

1 comment:

  1. இவருடையது ஓரளவு சரியான கணிப்பு என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.