Header Ads



தேசிய கொடியிலிருந்து சிங்கத்தை, நீக்குமாறு ஆலோசனை

தேசிய கொடியிலிருந்து சிங்க கொடியை நீக்குமாறு அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவிடம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொடியில் காணப்படும் சிங்கத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அனைத்து மக்களிடையேயும் சகோதரத்துவம் ஏற்படும் வகையிலான இலச்சினை ஒன்றை சேர்க்குமாறு குறித்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலுள்ள பெண்கள் அமைப்பொன்றினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மக்கள் கருத்து தெரிவிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்றிலேயே குறித்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்களை துஷ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக தண்டனை வழங்குவதற்கு தனியான நீதிமன்றம் மற்றும் பெண்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கென சுயாதீன சபை என்பன அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை அவர்கள் முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

5 comments:

  1. Singaththey ahattri oru maattay poda wendum. Adu silarukku unawu. Innum silarukku deywam. Eneyyawarkal awarkale aawaarkal

    ReplyDelete
  2. நிசார்,

    நீங்கள் கூறியதுதான் அருமையான யோசனை.

    அதை செயற்படுத்துவதற்காக 'மாதிரி கொடி' (model Flag) ஒன்றை தயாரிக்க வேண்டியுள்ளது. எனவே தயவு செய்து உங்களுடைய முழு உருவப்படமொன்றை உடனடியாக அனுப்பி வையுங்கள்!

    ReplyDelete
  3. Ande poali uruwaththey payan paduththalaam

    ReplyDelete
  4. Ithu ponra Maattu ideakalal than mulu naadum mattukkup pinnaal poha vendiya nilai... Aarokiyamai yosithal naadu valam perum...

    ReplyDelete

Powered by Blogger.