Header Ads



நல்லாட்சி அரசாங்கம் சட்டத்தை, நடைமுறைப்படுத்துவதில் திருப்திகரமாக இல்லை - பேராசிரியர் சரத்

நல்லாட்சி அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வழங்கும் பங்களிப்பு திருப்திகரமானதாக இல்லை என்று பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார்.

இன்று (05) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ம் திகதி சட்ட மா அதிபர் ஓய்வு பெற்ற நிலையில் அந்தப் பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபரின் செயற்பாடுகள் குறித்து சந்தோஷப்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர் இனி நியமிக்கப்பட உள்ள சட்ட மா அதிபர் நீதிமன்ற அமைப்பிற்குள் நியாயத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவராக இருப்பார் என்று எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட மா அதிபர் பதவிக்கு விரைவில் தகுதியான ஒருவரை நியமிக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.