Header Ads



அரசாங்கத்திற்கெதிராக தேங்காய் உடைப்பதற்காக, திருட்டில் ஈடுபட்ட கூட்டு எதிர்க்கட்சி

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை மூட வேண்டும் என வேண்டுதல் செய்து ஹிக்கடுவ சீனிகம ஆலயத்தில் தேங்காய் உடைக்கப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இந்த வேண்டுதலுக்காக உடுகம பிரதேசத்தில் உள்ள அரச காணியொன்றில் இருந்து 700 தேங்காய்களை திருடியதாக கூறப்படும் நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அரச காணியில் திருடிய தேங்காய் உழவு இயந்திரம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அதில் அரசியல்வாதி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நாகொட கிராம சேவகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளருமான ஆனந்த லெனரோல் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

5 comments:

  1. கடவுளுக்கு காணிக்கைக்காக களவாடித்தான் தேங்காய் உடைக்க வேண்டுமா தேங்க்காய் மடையர்களா? பொதுமக்களின் சொத்துக்களை எப்படியெல்லாம் சுரண்டியிருப்பீர்கள். உங்களுக்கான சரணாலயம் FCID தான். இவர்களின் பெயர்களும் சாடிக்கேற்ற மூடிதான்.
    திருட்டுக் கும்பல் (தினேஷ் குணவர்தன)
    உடைத்த களவாடியதேங்காய் (உதய கம்மன்பில)
    விடியமுன் வீணாய்போச்சே (விமல் வீரவம்ச)
    வாய்திறந்துபேச தேவனுக்கு நாவில்லாமல் போச்சே (வாசுதேவ நாணயக்கார)

    ReplyDelete
    Replies
    1. @ Ramsin களவு எடுத்தவனை காப்பாற்ற தேங்காய்க்குள் களவெடுத்து உடைத்தாலென்ன என நினைத்திருப்பார்கள்!
      அல்லது அரசியல் பழக்கம் அடுத்தவனோட தேங்காய் காணிவரை சென்றிருக்கும்.

      Delete
  2. யாருமில்லை.. அந்த கூட்டுக் களவானிகள் தான்.

    ReplyDelete
  3. கள்ளனுக்கு கள்ளப்புத்தி திருந்த மாட்டானுகள்

    ReplyDelete
  4. திருடராய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது..தேங்காய்கள் உடைத்தும் திருடனைப்பினையில் எடுக்க முடியாது.....அதனால் திருடாதே அரசியல் தேங்காய் திருடாதே யாப்பா திருடாதே.......

    ReplyDelete

Powered by Blogger.