Header Ads



முஸ்­லிம்­ வன்­மு­றைகளுடன், ஞானசாரரை குற்­ற­வா­ளி­யாக்க சூழ்ச்­சி - மைத்­தி­ரி­யிடம் BBS முறை­யீடு

-ARA.Fareel-

தற்­போது விளக்­க­ம­றி­யலில் இருக்கும் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரை அளுத்­க­மயில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் உட்­பட பல குற்றச் செயல்­க­ளுடன் சம்­பந்­தப்­ப­டுத்தி குற்­ற­வா­ளி­யாக நிரூ­பிக்க சூழ்ச்­சிகள் நடை­பெ­று­வ­தாக அவ் அமைப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முறை­யிட்­டுள்­ளது.

பொது­பல சேனாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே தலை­மை­யி­லான பெளத்த குரு­மார்கள் அடங்­கிய குழு நேற்று முன்­தினம் மாலை ஜனா­தி­ப­தியின் செய­ல­கத்தில் ஜனா­தி­ப­தியின் செய­லா­ளரைச் சந்­தித்து இம்­மு­றைப்­பாட்­டினை முன்­வைத்­தது.

சுமார் 30 நிமி­டங்கள் நடை­பெற்ற இச்­சந்­திப்பில் நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றச்­சாட்டில் கைதாகி விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் ஞான­சார தேரர் தொடர்­பான பழைய சம்­ப­வங்கள் இப்­போது தேடிப்­பார்க்­கப்­பட்டு சோடிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அளுத்­க­மயில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­க­ளுக்கு ஞான­சார தேரரே காரணம் என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதனை நாம் தொடர்ந்து மறுத்து வந்­துள்ளோம்.

இதற்­காக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு அதற்­கான கார­ணத்தை அறி­ய­வேண்­டு­மென தொட­ராக கோரிக்கை விடுத்து வந்­துள்ளோம். முன்னாள் ஜனா­தி­ப­தி­யி­டமும் தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யி­டமும் இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. ஆனால் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

தற்­போது ஞான­சார தேர­ருக்கு சொந்­த­மாக வாகனம் இருக்­கி­றது. இந்த வாகனம் எவ்­வாறு கொள்­வ­னவு செய்­யப்­பட்­டது. யாரினால் நிதி­வ­ழங்­கப்­பட்­டது என்­றெல்லாம் தேடிப்­பார்க்­கி­றார்கள்.

நல்­லாட்சி அர­சாங்கம் உண்­மை­யான குற்­ற­வா­ளி­க­ளையே கைது­செய்ய வேண்டும். நாட்­டுக்­கா­கவும் பௌத்­தத்­துக்­கா­கவும் தேசிய பாது­காப்­புக்­கா­கவும் குரல் கொடுத்த ஞான­சாரர் விடு­தலை செய்­யப்­பட வேண்டும்.

இரா­ணுவ வீரர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என பொது ­பல ­சே­னாவின் குழு­வினர் ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­விக்­கு­மாறு அவ­ரது செய­லாளரிடம் தெளி­வு­ப­டுத்­தி­யதுடன் இவ்­வி­ட­யங்கள் உள்­ள­டக்­கிய மகஜர் ஒன்­றி­னையும் கைய­ளித்­தது.

3 comments:

  1. அவர் குற்றமற்றவர் எனில் ஏன் இவர்கள் இவ்வளவு அஞ்ச வேண்டும்?

    ReplyDelete
  2. ஒட்டுண்ணிப்பேன் கடித்ததைப் பார்ப்பதற்கு வேண்டுமானால் உருப்பெருக்கி தேவைப்படலாம். ஆனால் ஒன்பதடி நாகம் தீண்டியதைப்பார்க்க அதெல்லாம் தேவையில்லை.

    ReplyDelete
  3. Hi Pro. Dilan take the challenge and go to court!!!!

    ReplyDelete

Powered by Blogger.