இலங்கையில் இந்தியத் தளபதி இருக்கும் போது, பாகிஸ்தான் போர்க்கப்பலும் கொழும்பு வருகிறது
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் பாரிய போர்க்கப்பல் ஒன்றும் இன்று கொழும்புக்கு வரவுள்ளது.
நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக, பிஎன்எஸ் சம்சீர் என்ற இந்தப் போர்க்கப்பல், இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.சிறிலங்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள வலுவான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் இடம்பெறுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது பாகிஸ்தான் போர்க்கப்பலில் உள்ள அதிகாரிகள், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன், கூட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளனர்.
இந்திய இராணுவத் தளபதியும், பாகிஸ்தான் போர்க்கப்பலும் ஒரே நேரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதானது, பாதுகாப்பு வல்லுனர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக, பிஎன்எஸ் சம்சீர் என்ற இந்தப் போர்க்கப்பல், இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.சிறிலங்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள வலுவான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் இடம்பெறுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது பாகிஸ்தான் போர்க்கப்பலில் உள்ள அதிகாரிகள், சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன், கூட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளனர்.
இந்திய இராணுவத் தளபதியும், பாகிஸ்தான் போர்க்கப்பலும் ஒரே நேரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதானது, பாதுகாப்பு வல்லுனர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment