Header Ads



மகிந்தவிற்கு போதுமான நேரத்தை, அனுரகுமார ஒதுக்குவதில்லையாம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தமுறை வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கருத்து தெரிவிப்பதிலிருந்து விலகி இருக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முறை வரவு-செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொள்கின்றமை தொடர்பில் எமது செய்திச் சேவை முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளரிடம் வினவியபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. 

எட்டாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதில் இருந்து இதுவரை முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உறையாற்றவில்லை.

நாடாளுமன்ற விவாதத்தில் நேரம் ஒதுக்கப்படுகின்றபோது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் அனுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதிக்கு போதுமான நேரத்தை ஒதுக்குவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கை, உதலாகம அறிக்கை மற்றும் பரனகம அறிக்கை தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம்  கடந்த மாதம் இடம்பெற்றது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருந்தபோதும் அந்த தினத்தில் அவரது விவாதங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.