Header Ads



வாஸ் குணவர்தன சிறைச்சாலை, ஆஸ்பத்திரியில் அனுமதி

மொஹமட் ஷியாம் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன வெலிக்கடை சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதயநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்தும் சிகிச்சை பெற வேண்டுமெனவும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளமை காரணமாகவே இவர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய நபர்கள் வெலிக்கடை சிறைச்சாலையின் செபல்-03 வாட்டில் தனித்தனியே சிறை வைக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை பொறுப்பதிகாரி அநுர ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மேற்படி அனைத்து குற்றவாளிகளும் சாதாரண பாதுகாப்பின் கீழேயே வெளிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். 

No comments

Powered by Blogger.