"நாசதாரிகள் திண்டு தீர்க்கப்பேகிறார்கள்"
-யு.எல். அலி அஷ்ரஃப் ஆல் சூரி-
வாழ்த்துங்களேன்
இத் தேசத் தோட்டத்தின்
விதைகள் நாங்கள்
கொடுமைத் தணலில்
வெந்து போனால்
வீணாகிப் போகும்
நம் தேசம்தான்
வண்ணத்துப் பூச்சிகளின்
வண்ணம் போனால்
யார் ரசிப்பார்
சிறுவர் எமது
உரிமைகள் ஊமையாய்
முடங்கிப் போனால்
முகவரி தொலைப்பது
நம் தேசம்தான்
ஒவ்வொரு உதயத்திலும்
உரிமை மீறல்கள்
உயிர் பறிப்புக்கள்
உயர்ந்து நிற்கும்
எம் தேசத்தில்
மூச்சு விடுவதற்கேனும்
முடியாமல்
முட்களின் மேலே
முடமாய் போகிறோம்
காடயர்களின்
காமப் பசிக்கு
தீனியாய் போகும்
எம் பிஞ்சு மேனியை
காக்கும் கவசமாய்
காணவில்லையே இத்
தாய் மண்ணை
முளையிலேயே
கருகிப்போகும் எம்
தேகங்களால்
விஞ்ஞானிகளும்
மூளை முதலீடுகளும்
புழுதியில் புழவாய்
துடிதுடிக்க மாண்டுபோகிறதே
இரண்டு கால்
மிருகங்களே!
சட்டத்தின் ஓட்டைகளால்
நழுவிச்செல்லும்
நாசதாரிகள்
நாளையும் நம்மைத்தான்
திண்டு தீர்க்கப்பேகிறார்கள்
சட்டம் சட்டை பைகளுக்குள்
சமாதியாகிப்போகும் போது
சரித்திரம் எப்படி
நாம் படைப்போம்
மனிதனின் சட்டம்
மனிதனை காக்காது
இறைவனின் சட்டமே
மனிதனை காத்திடும்
கொண்டுவாருங்கள்
மரண தண்டனை
மாண்டுவிடும்
சிறுவர் கொடுமை.
நாளைய விருட்சங்கள்
நாங்கள்
முளையிலேயே
கருகிப்போகாமல்
பூத்து
மணம் வீச
மனம் நிறைய
வளம் பெருக
வாழ்த்துங்களேன்
வானத்து எல்லையை
நாம் அடைவோம்.
Post a Comment