Header Ads



பிள்ளையை வளர்க்க பணமில்லை, வீதியில் விட்டுச்சென்ற தாய்

எனது பிள்ளையை வளர்க்க என்னிடம் பணமில்லை என கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு தான் பெற்ற பிள்ளையை வீதியில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

கண்டி பேராதனை தங்கொல்ல சந்தியில் இன்று மாலை 18 நாள் வயதான பெண் சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்த பெண் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்தே குறித்த சிசுவை மீட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வீதியில் கிடந்த சிசுவின் பக்கத்தில் அவரது தாய் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் இந்தக் குழந்தைக்கு 18 நாள் வயதாகின்றது எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையை வளர்க்க பணமில்லை என்பதனால் எவராவது பிள்ளை இல்லாதவர்கள் இந்தப் பிள்ளையை வளர்க்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமது கணவர் ஓர் கூலித்தொழிலாளி எனவும் குறித்த பெண் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.