Header Ads



சவூதி அரேபியாவில், இலங்கை பெண் வபாத்

இலங்கை இளம் குடும்பத் தலைவி ஒருவர் நேற்று (05.10.2015) திங்கட்கிழமை சவூதி, ரியாத் நகரில் மரணமானார். 

கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த ரிசானா நியாஸ் (வயது 30) என்ற இரண்டு பிள்ளையின் தாய் ஒருவரே ரியாத் நகரில் மரணமாகியுள்ளார். 

இவர் சவூதி ரியாத் நகரில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்திருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சுகவீமுற்று காணப்பட்டதாகவும் பின்னர் ரியாத் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.. 

இவரின் சடலம் குடும்பத்தினரின் அனுமதியுடன் இன்று (06) செவ்வாய்கிழமை சவூதி அராபியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.