மைத்திரியின் பின்னால் முஸ்லிம்...!
ஜனாதிபதி மைத்திரிபால சறிசேன மேற்கொள்ளும் அரசியல் காய்நகர்த்தல்கள் மற்றும் அதிரடித் தீர்மானங்களின் பின்னால் முஸ்லிம் அரசியல் பிரமுகர் ஒரு உள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்தது.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரி, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸ குறித்து வெளியிட்ட பகிரங்க கடிதம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சுதந்திர கட்சி செயலாளர்களை அதிரயாக நீக்கியமை, நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான தடை, தேசியப் பட்டியலில் ஆக்களை பெயரிட்டமை, சில அமைச்சு நியமனங்கள் உள்ளிட்ட விடயங்களில் இந்த முஸ்லிம் அரசியல் பிரமுகர் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதிக்கு இவர் வழங்கிய சில ஆலோனைகளே அவ்வாறான தீர்மானங்களை மைத்திரி மேற்கொள்ள காரணமெனவும் அறியவருகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 110 ஆசனங்களைப் பெற்றிருக்குமெனவும், எனினும் மைத்திரி வெளியிட்ட பகிரங்க கடிதமே அதனை மாற்றியமைத்ததாகவும், இந்த கடிதத்தையும், அதிலடங்கியுள்ள விடயங்களையும் உள்ளீர்ப்புச் செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்த முஸ்லிம் அரசியல் பிரமுகர் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்த இன்னும் சில விடயங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உள்ளபோதும், சில நலன்களுக்காக அதனை பகிரங்கப்படுத்துவதிலிருந்தும் தவிர்ந்து கொள்கிறோம்.
இதையும் பகிரங்கப்படுத்த வேண்டியதில்லை இதை பார்த்துக்கொண்டு இன துவேசம் பிடித்தவர்கள்.முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல் படுவதாக பிரச்சாரத்தை ஆரம்பித்து விடுவார்கள். அந்த அரசியல்வாதி வேறு யாரும் இல்லை கடைசியாக அமைச்சரானவராகத்தான் இருக்கும்.அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இருக்கிறார்.
ReplyDeleteNot politician member.different fellow.subject is 100% true.we know that persin too.but better to keep secret.this is what great help from allah.
ReplyDeleteஇலங்கை முஸ்லிம் சமூகம் பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இதுபோன்ற செய்திகளை பகிரங்கப்படுத்துவதன் மூலம் என்ன இலாபம் எதிர்பார்க்கப்படுகிறது....???!
ReplyDeletewho si that muslim any one guess him
ReplyDeleteUngalukke Therinda Pinbu Matraiya Oodahangalukku news kidaikkamal irukkuma enna. Sri Lanka and Secrets doesnt go together.
ReplyDeleteUnfortunately Sri Lankans cant keep any Secrets. Neengal mattra vidayangalai ''nalan karuthiyo'' illama '' nalan karuthamalo'' Kooravittalum. Inda oru vidayam pothum thuruvi thuruvi Aaraya. Who is the Author of this Article.
இப்போ அது பரகசியம்..... நாளை சிங்கள இணையத்தளங்களில் அவரின் பெயருடன் விடயங்கள் வெளியாகலாம்.
ReplyDeleteJaffna Muslim மாதிரி ஒரு மொக்க Media வ இந்த விடயத்தில் பார்த்ததே இல்ல.
ReplyDeleteJAFFNA MUSLIM WHAT DO YOU EXPECT FROM THIS ARTICLE
ReplyDelete