இனவாத, மதவாத பெயர்களை கொண்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்படுவதை நிறுத்துதல்
இனவாத மற்றும் மதவாத அடிப்படையிலான பெயர்களை கொண்ட அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது குறித்து தேர்தல்கள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களில் இப்படியான பல அரசியல் கட்சிகள் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இப்படியான கட்சிகளின் செயற்பாடுகள் சம்பந்தமாக கடந்த காலங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாகவே இப்படியான கட்சிகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது குறித்து தேர்தல்கள் செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் மத மற்றும் இன அடிப்படையிலான கட்சிகளின் பெயர்களை மாற்ற, கால அவகாசத்தை வழங்கவும் தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கடந்த சில வருடங்களில் இப்படியான பல அரசியல் கட்சிகள் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இப்படியான கட்சிகளின் செயற்பாடுகள் சம்பந்தமாக கடந்த காலங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாகவே இப்படியான கட்சிகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது குறித்து தேர்தல்கள் செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் மத மற்றும் இன அடிப்படையிலான கட்சிகளின் பெயர்களை மாற்ற, கால அவகாசத்தை வழங்கவும் தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
I agree!
ReplyDelete