நாடு இருளில் மூழ்கிய மின்தடைக்கு, இதுதான் காரணமாம்..!
குறைந்த கேள்வி காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்டமைப்பிற்கு அதிகளவான மின்சாரம் கிடைத்தமையே நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டமைக்கு காரணம் என மின்வலு மற்றும் வலு சக்தி அமைச்சு குறிப்பிடுகின்றது.
நேற்றிரவு 10 மணியளவில் குறைந்த அளவான கேள்வியே நிலவியதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவிக்கின்றார்.
அதன்போது கட்டமைப்பிற்கு அதிகளவான மின்சாரம் கிடைத்தமையாலே மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மின்வலு வலு சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்தடை, மின்தடைக்கான, மின்வலு மற்றும் வலு சக்தி அமைச்சு
Post a Comment