"மக்கள் எமக்கு இம்முறை, சந்தர்ப்பம் வழங்கினால்..." மஹிந்த
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் ஜனாதிபதியை மாற்றவே வாக்களித்தனர். ஆனால் ஜனாதிபதியுடன் சேர்ந்து அரசாங்கமும் மாற்றப்பட்டு மக்கள் ஏமாற்ப்பட்டுவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் அரச சேவைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் நாட்டின் சமஷ்டி வாத கோரிக்கைள் முற்றாக நிராகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காலி எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 100 நாள் அரசாங்கம் தேர்தல் பிரசார மேடைகளில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 100 திட்டத்தை முன்வைத்திருந்த போதும் ஆட்சி அதிகாரம் கிடைத்தன பின்னர்அதனை மறந்துவிட்டு பழிவாங்கும் படலத்தை தொடங்கியது.
அதன் பின்னர் விவசாயிகள் மற்றும் பெருந்தோட்ட துறையினர்,சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் தேயிலைக்கான நிர்ணய விலை அதிகரிக்கப்படும் என வழங்கிய வாக்குறுதிகளையும் ஐக்கிய தேசிய கட்சி மறந்து விட்டது. இறப்பர் நெல் உற்பத்தியாளர்களும் ஐக்கிய தேசியகட்சி ஆட்சியில் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சி மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையளித்தது. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டின் ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என்பதற்காகவே மக்கள் வாக்களித்தனர். ஆனால் ஜனாதிபதியுடன் சேர்ந்து அரசாங்கத்தையும் மாற்றிவிட்டனர். அதனால் தான் அது மாற்றம் அல்ல மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம் என்று கூறுகின்றோம்.
இதனால் இந்த அரசாங்கத்தை மாற்ற மக்கள் முன்வர வேண்டும். மக்கள் எமக்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கினால் தேயிலையிக்கான விலை 90 ரூபாவாகவும் பாலின் விலை 70 ரூபாவாகவும் ,நெல்லின் விலை 50 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படும். அரச சேவைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் நாட்டின் சமஷ்டி வாத கோரிக்கைள் முற்றாக நிராகறிக்கப்படும் என்றார்
What about your BBS??
ReplyDeleteநீங்கள் சும்மா கத்திக் கத்தி எந்தப் பயனும் இல்லை. தேயிலை, பால், நெல் ஆகியவற்றின் விலையை நாம் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக்கிட்டு இரண்டும் கெட்டான் நிலையில் ஒதுங்க வேண்டியது தான்.
ReplyDeleteIf opportunity given again your first duty is to be revenge our muslim leaders & entire muslim community.
ReplyDeleteWe are very keen in this concern.
சந்தர்ப்பம் வழங்கினால் முதல் நீங்கள் செய்வது முஸ்லிம்களையும் சமூகத்தின் உரிமைக் குரழாக என்றுமே ஓங்கியொழித்துக் கொண்றிருக்கும் றிஷாத் பதியுதீன் போன்ற இஸலாமிய தலைவர்களையும் பழிவாங்குவதையே
ஆதலால் குருநாகல் மாவட்டத்தின் துடிப்புள்ள இளைய சமூகமாகிய நாம் உங்களின் பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாறத் தயாரில்லை
Even you give every thing free, you will not be able to win.
ReplyDelete