Header Ads



மைத்திரியின் பின்னணியில் சந்திரிக்கா..?

நேற்று நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்டுள்ள அதே வேளை மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.

மஹிந்தவுடன் சேர்த்து சுதந்திரக் கட்சிக்குள் அவரின் தீவிர ஆதரவாளர்களான சுசில் பிரேம்ஜயந்த, அனுர யாப்பா ஆகியோரும் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகின்றது.

சுதந்திரக் கட்சிக்குள் சந்திரிக்காவின் மீள் வருகை மற்றும் கட்சி முடிவுகளில் அவரின் தலையீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அனுர யாப்பா மற்றும் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

எனினும் தற்போதைய நிலையில் அரசியல் மற்றும் கட்சி ரீதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளும் பெரும்பாலான முடிவுகளின் பின்னணியில் சந்திரிக்கா அம்மையார் செயற்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.