வாகண விபத்தில், உஸ்தாத் மரணம்
-நாகூர் ழரீஃப்-
இன்று முற்பகல் கெலிஓயா என்னும் இடத்தில் இடம்பெற்ற வாகண விபத்தில் நாவலப்பிட்டி தாருல் உலூம் அல் ஹாஷிமிய்யா அறபுக் கலாபீடத்தில் நீண்ட காலம் விரிவுரையாளராக கடமையாற்றிய அஷ் ஷைக் அப்துல் காதிர் அல் அன்வாரி அவர்கள் வஃபாத்தானார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).
அவர்களது மனைவியும் மற்றுமொரு உஸ்தாதுமாகிய அஷ் ஷைக் முஹம்மது நஜீம் அல் ஹாஷிமி அவர்களும் பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கபட்டு வருகின்றனர்.
வஃபாத்தான உஸ்தாத் அவர்களின் மறுமை ஈடேற்றத்திற்காகவும், ஏனையவர்களின் பூரண சுகத்திற்காகவும் துஆச் செய்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
Post a Comment