Header Ads



ஐக்கிய தேசியக் கட்சி அரசில் எமது கட்சிக்கு பெரிய கௌரவமும், அதிகாரமும் கிடைக்கவிருக்கிறது - ஹரீஸ்

(ஹாசிப் யாஸீன்)

மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் கொண்டு வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை
அழிக்க அக்கரைப்பற்றிலிருந்து ஓடி வந்த குதிரையை எமது மக்கள்
துரத்தியடித்ததைப்போல் இத்தேர்தலில் எமது கட்சியை மீண்டும் அழிக்க
வன்னியிலிருந்து பறந்து வந்திருக்கும் மயிலினையும் துரத்தியடிக்க
வேண்டும் என முன்னாள் பாhராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்
தெரிவித்தார்.

சாய்ந்தமருது – 14ம் பிரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளையின்
ஏற்பாட்டில் மகளிர் தேர்தல் பிரச்சார கருத்ரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை
காலை (02) மௌலானா வீதியில் இடம்பெற்றது. இதில் பெருமளவில் தாய்மார்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் வேட்பாளர் எச்.எம்.எம்.ஹரீஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இத்தேர்தலின் பிற்பாடு அமையப்போகும் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் எமது
கட்சிக்கு பெரியதோர் கௌரவமும், அதிகாரமும் கிடைக்கவிருக்கின்றது. இதனூடாக
எமது கல்முனை மாநகர பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன்
மாமனிதர் அஷ்ரஃப்பின் கல்முனை புதிய நரக அபிவிருத்தித் திட்டமும்
அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே மக்கள் தங்களது வாக்குகளை இத்தேர்தலில் சிதறடிக்காமல் முஸ்லிம்
காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள்
மூவருக்கும் வாக்களிக்க வேண்டும்.

வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதையாகி விடக்கூடாது எமது
மக்களின் நிலைமை. இதனை உணர்ந்து மக்கள் உதிரிக் கட்சிகளின் மாயைக்குள்
சிக்கிவிடாமல் எமது மக்களின் தேசிய மற்றம் சர்வதேச குரலான முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கரங்களை இத்தேர்தலில்
பலப்படுத்த நாம் அனைவரும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்.

மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் கொண்டு வந்த எமது தேசிய இயக்கமான ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸை அழிக்க அக்கரைப்பற்றிலிருந்து வந்த குதிரையை எமது
மக்கள் துரத்தியடித்தார்கள்.

அதுபோல் இத்தேர்தலில் எமது தாய்மார்கள் நோன்பு நோற்று, துஆச் செய்து,
தகஜ்ஜத் தொழுது, இளைஞர்கள் இரத்த சிந்தி வளர்த்த எமது கட்சியை அழிக்க
வன்னியிலிருந்து பறந்து வந்திருக்கும் மயிலினையும் துரத்தியடிக்க
வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

3 comments:

  1. பிரிவினை என்னும் கொடிய தீயை மக்கள் மனதில் மூட்டி, அதற்கு எண்ணெய் வார்த்துக்கொண்டு ஒற்றுமை என்ற ஒன்று இருக்கின்றதா என்றே தெரியாத தலைவர்கள் தான் நமது இன்றைய தலைவர்கள். வீட்டுக்குள் பிரிவினை, தெருவினில் பிரிவினை, கிராமத்தில் பிரிவினை, பிரதேசத்தில் பிரிவினை, மாகாணத்தில் பிரிவினை, நாட்டு மட்டத்தில் பிரிவினை, சர்வதேச ரீதியில் பிரிவினை....இந்தப்பிரிவினை அழிந்து ஒற்றுமைப்படும் வரைக்கும் நாம் அடி வாங்குவோம், நமது உயிர்கள் பறிக்கப்படும், குழந்தைகள் எரிக்கப்படுவார்கள், பிள்ளைத் தாய்ச்சியின் வயிறு கிழிக்கப்பட்டு உலகத்தின் வெளிச்சத்தைக்கான முன்பே அந்த சிசு வால் முனையால் குத்திக் குதறப்படும், பெண்களின் தூய்மை அளிக்கப்படும், வீடுகள் - கடைகள் - சொத்துகள் எரிக்கப்படும்... இன்னும் எத்தனையோ அநியாயங்கள் செய்யப்படும்...எமக்கெதிராக..! இன்றைய இந்த அரசியல் நிச்சயம் எம் எல்லோருக்காகவுமல்ல.அது சிலருக்கு மாத்திரம் தான். இனி எம்மோடு சேர்ந்து எமது அந்த so called தலைவர்களும் இதே அனுபவத்தை அடையத்தான் போகிறார்கள், அதே அநியாயங்களை சுவைக்கத்தான் போகிறார்கள்...அந்த நாள் வரும் வரை..... அந்த நாள்... போதும் நாம் பிரிந்து பிரிந்து இருந்தது, போதும் இந்த அடி, உதை, அநியாயம், சித்திரவதை, போதும். போதும்... இனி ஒன்றாய்ச் சேருவோம் என்று உணரும் நாள்...இன்னும் எத்தனை தொலைவிலோ அந்த நாள்...!

    ReplyDelete
  2. உங்களுக்கு தேவையானது கௌரவமும் அதிகாரமும்தான் இதை விட்டுவிட்டு மக்களுக்காக ஏதாவது செய்யுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.