Header Ads



முன்னாள் அமைச்சரின் வங்கிக்கணக்குகளில் 400 மில்லியன் - விஜயதாச ராஜபக்ச

முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களிற்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்காத இலஞ்ச ஊழல்விசாரணைகள் திணைக்கள அதிகாரிகள் குறித்து விசாரணைகள் இடம்பெற உள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்ட ஊழல்களை மூடிமறைக்க முயன்றார்களா? அல்லது ஆர்வமின்மை,காரணமாக இவ்வாறு நடந்துகொண்டார்களா என விசாரணைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றங்களில் ஈடுபட்டவர்களை பகிரங்கப்படுத்தி, அவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு பதில் சில அதிகாரிகள் குற்றவாளிகளை காப்பாற்ற அல்லது குற்றங்களை மூடிமறைக்க முயன்றுள்ளனர்.நாங்கள் இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆராய்ந்தோம், வலுவான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளோம்,

முன்னாள் அமைச்சர் ஓருவரின் வங்கிக்கணக்குகளில் 400 மில்லியன் காணப்படுகின்றது, அது குறித்து அவரால் தெளிவான விளக்கத்தை வழங்கமுடியவில்லை, அதிகாரிகள் இது குறித்த விசாரணைகளை இழுத்தடிக்கின்றனர்

No comments

Powered by Blogger.