Header Ads



விமானி தகவல் வழங்க, 24 தங்கக் கட்டிகளுடன் ஒருவர் கைது

இந்தியாவின் மும்பை நகரில் இருந்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான 24 தங்கக்கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். 

9W 256 என்ற விமானத்தில் குறித்த சந்தேக நபர் வருகை தந்துள்ளதுடன், அந்த விமானத்தின் விமானி வழங்கிய தகவல்களின் படி அவர் கைது செய்யப்பட்டதாகவும் லெஸ்லி காமினி தெரிவித்தார். 

அத்துடன் சந்தேக நபரின் பயணப் பையில் இருந்த தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த சந்தேக நபர் அக்குறனை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

1 comment:

  1. விமானியை நம்பி இருப்பார். 24 ஐ விடக்கூடவாகவே கொண்டு வந்திருப்பார். விமானி காலை வாறிவிட்டு தனது share ஐ எடுத்துக்கொண்டு மாறி இருப்பார். நம் நாட்டு விமானியாக இருந்தால் chances அதிகமும் கூட. எடு எப்படிப்போனாலும், கடத்தியது குற்றம்... நம்பியது மடமை.. பாவம்.

    ReplyDelete

Powered by Blogger.