Header Ads



தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கிறது - 24 மணித்தியாலத்தில் 9 வன்முறைகள்

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் பொதுத் தேர்தல் தொடர்பிலான 09 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் செயலக தேர்தல் முறைப்பாடு பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 892 ஆகும்.

அவற்றில் அதிகம் சட்ட விரோதமான பாதாகைகள், சுவரொட்கள் தொடர்பிலானவைகளாகும், அவை தொடர்பில 190 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 123 காவல்துறை சுற்றிவளைப்புகளில் 304 பேரும், காவல்துறை தேர்தல் முறைப்பாடு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற 145 முறைப்பாடுகள் தொடர்பில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.