மத்திய கிழக்கில் இன்னல்களை அனுபவித்த 115 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மத்திய கிழக்கில் தொழில்வாய்ப்பிற்காக சென்று பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய 115 இலங்கைப் பணியாளர்கள் இன்று (29) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 73 பெண்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நாட்டை வந்தடைந்த பணிப்பெண்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய தெரிவித்தார்.
Post a Comment