Header Ads



"மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை, மக்கள் குப்பைத் தொட்டியில் இடுவார்கள்"

பழைய குருடி கதவை திறடி என்னும் தோரணையில் மஹிந்த தோதல் குறித்து அறிவித்துள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை மக்கள் குப்பைத் தொட்டியில் இடுவார்கள் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முகநூலில் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பில் எவ்வித புதிய விடயங்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

பழைய விடயங்களையே அவர் இன்றைய தினம் மீண்டும் கூறியுள்ளதாக நவீன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த படிப்படியாக வீழ்வதனைப் பார்க்க கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எந்தக்கட்சியில் போட்டியிடுவது என்பதனை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.