Header Ads



சுதந்திர கட்சியின் வேட்பாளர் பட்டியலை, பிரத்தியேகமாக பரிசீலிப்பதற்கு மைத்திரி தீர்மானம்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழு ஒன்றை நியமித்து, வேட்பாளர் பட்டியலை பிரத்தியேகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானத்துள்ளார். 

இதன்படி இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுசில் பிரேமஜெயந்த, அனுரபிரியதர்ஷன யாப்பா உள்ளிட்டவர்களை உள்ளடக்கி இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

கடந்த தினங்களில் இந்த குழு சந்திப்பை மேற்கொண்டு, வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளது. 

இந்த பட்டியலை தயாரிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.