Header Ads



"ராஜித சேனா­ரத்ன முஸ்லிம்களிடம், மன்­னிப்பு கோர வேண்டும்"

பத­விக்­கா­கவும் பட்­டத்­திற்­கா­கவும் முஸ்­லிம்கள் மதம் மாறி­னார்கள் என்ற வர­லாறே இந்த நாட்டில் கிடை­யாது. எனவே அமைச்சர் ராஜித தலைவர் ஹக்கீம் குறித்து தெரி­வித்த கருத்தை மாற்­றிக்­கொண்டு அவர் பகி­ரங்­க­மாக முஸ்லிம் சமு­தா­யத்­திடம் மன்­னிப்பு கோர வேண்டும் என கல்­முனை மாந­கர சபையின் பிர­தி­மே­யரும் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித்­த­லை­வ­ரு­மான ஏ.எல். அப்துல் மஜீத் கூறினார்.

கல்­முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம்  நடை­பெற்­ற­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். கல்­முனை மாந­க­ர­மேயர் சட்­டத்­த­ரணி எம்.நிஸாம் காரி­யப்பர் தலை­மையில் மாந­க­ர­சபை சபை சபா மண்­ட­பத்தில் கூட்டம் நடை­பெற்­றது.

ஜனா­தி­பதி பதவி கிடைக்­கு­மென்­றி­ருந்தால் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது மதத்­தையும் மாற்­றிக்­கொள்வார் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன அண்­மையில் தெரி­வித்த கருத்து தொடர்பில் பிர­தி­மேயர் அப்துல் மஜீத் கவ­லையும் கண்­ட­னமும் தெரி­வித்து சபையில் உரை­யாற்­றினார்.

அவரைத் தொடர்ந்து உறுப்­பி­னர்கள் பலரும் இந்த விடயம் தொடர்­பாக கூட்­டத்தில் கவ­லையும் கண்­ட­னமும் தெரி­வித்து உரை­யாற்­றி­ய­துடன் இறு­தி­யாக மேயர் நிஸாம் காரி­யப்­பரும் உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­களை ஏற்­ற­வ­ராக உரை­யாற்­றினார்.பிர­தி­மேயர் மேலும் உரை­யாற்­று­கையில்,

அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தகவல் திணைக்­க­ளத்தில் அண்­மையில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போது முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­ம் குறித்து தெரி­வித்த கருத்து பெரும் சர்ச்­சை­யை கிளப்­பி­யி­ருக்­கின்­றது.

குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தில் கடு­மை­யான விமர்­ச­னங்கள் அமைச்சர் ராஜி­தவின் கூற்று குறித்து முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. மிகவும் விமர்­ச­னத்­துக்­கு­ரி­ய­தாக அது மாறி­யி­ருக்­கின்­றது.

கருத்தும் கண்­ட­னமும்

ஜனா­தி­பதிப் பதவி கிடைக்குமென்­றி­ருந்தால் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது மதத்­தையும் மாற்­றிக்­கொள்­வ­ாரென அமைச்சர் ராஜித தெரி­வித்த கருத்து வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும்.

இலங்கை ஜன­நா­யகக் குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்பில் 20 ஆவது திருத்தம் ஒன்றை கொண்­டு­வர வேண்­டு­மென்­ப­தற்­காக முன்­மொ­ழி­யப்­பட்ட பிரே­ர­ணைகள் தொடர்­பாக முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அவ­ரு­டைய தலை­மையில் சிறு­பான்மைக் கட்­சி­களும் மிக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டன.

இரு பிர­தான கட்­சி­களும் அவர்­க­ளு­டைய அர­சியல் அபி­லா­ஷை­களை அடைந்­து­கொள்­வ­தற்­கான ஒரு முன்மொழி­வா­கவே 20 ஆவது திருத்­த­மி­ருக்­கின்­ற­து என சிறு­பான்மைக் கட்­சிகள் சுட்­டிக்­காட்­டின.

சிறீ­மாவோ

1972 ஆம் ஆண்டு சிறீ­மாவோ ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க முத­லா­வது குடி­ய­ரசு சாச­னத்தை கொண்­டு­வந்­த­போது அப்­போ­தி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­டணி உறுப்­பி­னர்கள் அதனை எதிர்த்­தனர். அத்­துடன் அந்த நகலை தீயிட்டும் கொளுத்­தினர்.

சிறு­பான்மைச் சமூ­கத்­திற்கு இருக்கும் ஒரே­யொரு காப்­பு­ட­மை­யான செனட் சபையை ஒழிக்கும் 29ஆவது சரத்தின் "ஏ" பிரிவு ஏன் நீக்­கப்­பட்­ட­தெ­னவும் அது போன்று சிறு­பான்மை சமூ­கத்தின் உரி­மையை இல்­லாமல் செய்யும் சரத்­து­க­ளி­ருக்­கின்­றன என்­ப­தற்­காக தமிழ்த்­த­லை­வர்கள் போரா­டி­னார்கள். அண்ணன் அமிர்­த­லிங்கம் சிறை­யி­ல­டைக்­கப்­பட்டார். இத்­த­கைய கடந்த கால அர­சியல் வர­லா­று­க­ளுண்டு.

ஜே.ஆர்.

ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன கொண்டு வந்த அர­சியல் யாப்பு கூட சிறு­பான்மை சமூ­கங்­களைப் பல விட­யங்­களில் பாதிக்­கின்­றது என்ற குரல்­களும் அவ்­வப்­போது எழுந்து வந்­துள்­ளன. எனவே தான் இந்த 20 ஆவது திருத்­த­மென்­பது 35 வரு­டங்­க­ளுக்குப் பிறகு கொண்டு வரப்படும் அர­சியல் சீர்­தி­ருத்தமென்பதால் சிறு­பான்மை சமூ­கங்­களின் அர­சியல் உரி­மை­களை நிலை­நாட்டும் உத்­த­ர­வா­தப்­ப­டுத்தும் நிலை­மையை உரு­வாக்க வேண்­டு­மென்­பதில் எம் தலைவர் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டார்.

பெரும் தலை­யிடி
சிறிய கட்­சிகள், சிறு­பான்மைக் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து இதற்­காகச் செயற்­பட்­டமை சிங்­கள இனவாத, வகுப்பு வாத சக்­தி­க­ளுக்கு பெரும் தலை­யி­டி­யா­கவே இருந்­தது. குறிப்­பாக எமது தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஒன்­றி­ணைந்து எடுத்த 20ஆவது திருத்தம் தொடர்­பான நட­வ­டிக்­கைகள் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன போன்­ற­வர்­க­ளுக்குப் பிடிக்­க­வில்லை. இதனால் தான் மிக மோச­மான கருத்தை அமைச்சர் ராஜித முன்­வைத்­துள்ளார்.

சுய­ந­ல­வாதி
ரவூப் ஹக்கீம் ஒரு சுய­ந­ல­வாதி, சமூ­கத்­திற்­காக அவர் இரட்டை வாக்கு முறையைக் கொண்டு வர­வில்லை, அவ­ரு­டைய கட்­சியை வளர்க்­கவும் அவ­ரு­டைய பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­த­வுமே கொண்­டு­வ­ரு­கிறார் என அமைச்சர் ராஜித கூறி­யது மட்­டு­மன்றி ஜனா­தி­பதிப் பத­வி கி­டைக்­கு­மா­க­வி­ருந்தால் அவர் தனது மதத்­தையும் மாற்றிக் கொள்­வா­ரென்ற மிக மோச­மான கருத்­தையும் வெளி­யிட்டார்.

15 வரு­டங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு 15வரு­டங்­க­ளாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கிக் கொண்­டி­ருக்­கின்றார். பல தட­வைகள் சமூ­கத்­திற்­காக அமைச்சர் பத­வி­களைத் தூக்கி எறிந்து விட்டு வந்­துள்ளார். அமைச்சர் பத­விக்­காக அங்­கு­மிங்கும் அலைந்து ஆல வட்டம் போடும் ஒரு தலை­வ­ரல்ல முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரெ­ன்­பதை இத்­த­கை­ய­வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜித
ஆனால் அமைச்சர் ராஜித வளர்த்த கட்­சி­யையே விட்டு வெளி­யேறி அமைச்சர் பத­வியைப் பெறு­வ­தற்­காக ஐக்­கிய முன்­னணி அரசில் இணைந்து கொண்­ட வ­ர­லாற்றை மறுத்து விட­மு­டி­யாது. முஸ்­லிம்கள் தமது உயிரை விடவும் தமது சம­யத்தை மேலாக மதிப்­ப­வர்கள். அதற்­காக போராடி மடி­யக்­
கூ­டி­ய­வர்கள்.

ருஷ்தி - தஸ்­லீமா
முஸ்லிம் சமு­தா­யத்தின் அடிப்­படைக் கோட்­பா­டு­களைக் காட்டிக் கொடுக்கும் கருத்­துக்­களைத் தெரி­வித்த சல்மான் ருஷ்­தி­யையும் தஸ்­லீமா ந­ஸ் ரீ­னையும் சமு­த­ாயத்­தி­லி­ருந்து தூக்­கி­யெ­றிந்­தது எமது சமு­தாயம். எனவே அமைச்சர் ராஜித இதைப்­பு­ரிந்து கொள்­ள­வேண்டும்.

ஒரு சாதா­ரண குடி­ம­க­னாக இருந்­தாலும் சரி பதவி பட்டம் பணத்­திற்­காகச் சம­யத்தைத் துறக்­க­மாட்டான். ஆட்சி அதி­கா­ரத்தைப் பிடிக்க வேண்­டு­மென்­ப­தற்­காக எவர் மதம் மாறி­னார்­க­ளென்­பதை வர­லாற்றைப் புரட்டிப் பார்த்துப் புரிந்து கொள்­ள­வேண்டும்.

முஸ்­லிம்கள்
முஸ்­லிம்கள் அப்­ப­டி­யல்ல. இலங்கை வர­லாற்றில் அப்­படி எதுவும் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை. பத­விக்­காக பட்­டத்­திற்­காக பணத்­திற்­காக முஸ்­லிம்கள் மதம் மாறி­னார்­க­ளென்ற வர­லா­றே ­கி­டை­யாது. எனவே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் பகி­ரங்­க­மாக முஸ்லிம் சமு­தா­யத்­திடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறினார்.

4 comments:

  1. இருவருக்கும் என் வித்தியாசம்.
    ஹகீம்: சரியான நேரத்தில் பிழையான முடிவு எடுப்பார், பேச வேண்டிய இடத்தில் பேச மாட்டார்.
    ராஜித: சரியான நேரத்தில் சரியான முடிவும் ,பேச வேண்டிய இடத்தில் சரியாக பேசுவார் முஸ்லிம்களுக்காக... சென்ற தேர்தலில் நடத்தாது, தற்போது கொழும்பில் குப்பை கூளங்களை அகற்றும் படி my3 சொன்னது எல்லாம் மறக்க வில்லை நாம்.

    ReplyDelete
  2. இவர் முஸ்லிகளிடம் மன்னிப்பு கேட்காமலே மன்னிக்கப் பட வேண்டியவர்தான் டாக்டர் ராஜித சேனாரத்ன , அந்த வார்த்தைக்குரிய பெறுமதி தெரியாமல் அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைதான் அது . இதை விட சிர்க்கான வார்தையெல்லாம் (மகிந்தவின் நாமம் சொன்னால் பரகத் கிடைக்கும் ) அஸ்வர் ஏற்ட்கனவே பேசிவிட்டார். கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்களே வாய் மூடி இருந்த போது முஸ்லிம்களுக்காக தொடர்ந்து பேசியவர்களில் இவர் முக்கியமானவர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது . இவர் போன்றவர்களின் வார்த்தைகள்தான் அன்று எமக்கு ஆறுதலளித்து.
    அடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் சமூகத்துக்காக குரல் கொடுப்பது போன்று பூச்சாண்டி காட்டுகிறார்களே தவிர சமுக பற்று ஒன்றும் அவர்களிடம் இல்லை. கட்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சமுகத்துக்கு கொடுப்பது இல்லை. இருபதாவது திருத்தச்சட்டம் சிறிய கட்சிகளுக்கு பாராளுமன்ற அங்கத்தவர்களை குறைத்து விடும் , முஸ்லிம் காங்கிரசும் இதனால் பாதிப்படையும் என்கிற கவலையே தவிர சமுகத்திலிருந்து நல்ல பல தலைவர்களை உருவாக்கி பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லுவது தடைப் பட்டு விடுமே என்கிற கவலை அவர்களிடம் இல்லை. இன்றைக்கு வரைக்கும் இத்தனை பேரை வைத்துக் கொண்டு குறைந்தது வில்பத்து பிரச்சினைக்கு கூட வாய் திறக்காதவர்கள் ராஜிதவின் வார்த்தையை துக்கிக் கொண்டு வாய் கிழிய கத்துகிறது வேடிக்கையாக இருக்கிறது.

    ReplyDelete
  3. மஜீத் காக்கா, அரசியலில் சாணாக்கியம் இருந்தால் இப்படியான பிரச்சினைகள் வராது. ஒரே மந்திரி சபையில் இருந்து கொண்டு அங்கு பேசவேண்டியதை , முரண்படும் சக அமைச்சர்களுக்கு சரியான தெளிவான விளக்கம் கொடுக்கவேண்டியதை விட்டு விட்டு வெளியில் வந்து கூப்பாடு போட்டால் ( ராஜிதவையும் ஏனைய சில அமைச்சர்களையும் சேர்த்து சாடி அறிக்கை விட்டாவர் ) இப்படிதான் பேசுவார்கள். உங்களது தலைவரின் நடவடிக்கையும் ராஜிதவை அப்படி கூர தூண்டியுல்லது என்றே கருத தோன்றுகிறது. பதவிக்காக தான் முஸ்லிம்களை விற்று ராஜபக்க ஆட்சியில் 18 இக்கும் கை உயர்த்தி, ராஜபக்ச அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு அத்தனை அட்டுழியம் நடக்கும் மட்டும் பணம் பதவியை அனுபவித்துக் கொண்டு இருந்து விட்டு கடைசி நேரத்தில் 500 மில்லியன் ( சுபையிர் பகிரங்கமாக கூரியது ) ரணிலிடம் வாங்கிக் கொண்டு இடம்மாறியது...etc. ரணிலுக்கு காலை வாரி மகிந்தவிடம் வருவதும் பின் மகிந்தவுக்கு காலை வாரி ரணிலிடம் வருவதும் உங்க தலைவரின் கூத்து தான் என்ன? இப்ப உங்கள் தலைவர் ரணிலிடம் சரணாகதி அரசியல் செய்ய வெளிக்கிடுவார் போல் தெரிகிறது. சூடு சொரணை இருந்தால் இந்த முறை தனித்து கேளுங்கோ அதன் பிற்பாடு உங்கள் தலைவரும் அவரது அடிவருடிகளும் வேண்டிய கூத்தை அடித்து பட்டம் பதவியை பெற்று கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. ரவூப் ஹக்கீமின் பதவி ஆசை ; இஸ்லாத்தை அல்ல பொதுபலசேன முஸ்லிம் மக்களுக்கு அட்டூளியங்களை செய்த போதல்லாம், அதற்காக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்தான் டாக்டர் ராஜித சேனாரத்ன இப்போது எம்மில் பலருக்கு இனவாதியாக மாறிவிட்டார். மு.கா. தலைவரைப் பற்றி அவர் சொன்ன செய்திதான் அதற்கு காரணம். இதை அறிவு ரீதியாக அனுக வேண்டுமே தவிர, அரசியல் இலாபம் தேடும் ஒரு சில கூஜா தூக்கிகளின் கதைகளைக் கேட்டு முட்டாள் தனமாக இனவாத முத்திரை குத்த வேண்டிய தேவை இல்லை. அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து ஒரு இனவாத கருத்தல்ல. அவர் அமைச்சர் ஹக்கீம் பற்றிய ஒரு கருத்தை கூறியிருந்தார். அது சரியான கருத்தாக அல்லது பிழையான கருத்தாக இருக்கலாம். இலங்கை முஸ்லீம்களுக்கு கலாச்சார மத அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த முஸ்லீம் அமைச்சர்கள் அரசாங்கத்துடன் மௌனமாக இருந்த சந்தர்பங்களில் அமைச்சர் ராஜித பகிரங்கமாக எதிர்த்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். நிச்சயமாக ஒரு இனவாதி அப்படி செய்திருக்க மாட்டார். ராஜிதவை இனவாதிகளால் மிகவும் தூசிக்கப் பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். இதனால்தான் ராஜிதவுக்கு முன்னால் சனாதிபதி மஹிந்த மதவாத அமைப்புகளின் விடயங்களில் தலையீடு செய்ய வேண்டாம் என்று பகிரங்கமாக அச்சுறித்தியிருந்ததும் நம் எல்லோரும் அறிவோம்.
    இவரை இனவாதியாகப் பார்க்கும் எம் சகோதர்கள் பேருவளையில் முஸ்லீம்களுக்கு உதவியதை மறந்துவிட்டார்கள் . அத்துடன் ஹக்கீம் என்ற ஒருவ‌ருக்கு தனியாக கூறப்பட்டதை சமூகம் சார்ந்ததாக திரிவு படுத்தியவரே உண்மையான இனவாதியாக கருதப்பட வேண்டும்.
    எமது சமூகத்துக்கு உதவ இருக்கின்ற ஒன்றிரெண்டு பேரையும் எதிரியாக்கி அரசியல் இலாபம் தேடுபவர்கள்தான் எமது உண்மையான எதிரி. அதைவிடுத்து தன் இனத்தவனின் தவறை மறைத்து இனவாதம் பேசிக்கொண்டு அதற்கு இஸ்லாமிய வாத மூலாம் பூச முற்படுவதென்பது, முஸ்லிம் சமூகத்தை நாசகார சதிவலையில் மாட்டிவிட்டு அதில் குளிர்காய கங்கன‌ம் கட்டிக்கொண்டிருக்கும் இனவாத ஊடகங்களுக்கு தீனிபோடும் வேலையாக அமைந்துவிடும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ரவுப் ஹக்கீமின் அதி மோக பதவி ஆசையைத்தான் ராஜித இங்கு குறிப் பிட்டார் அன்றி இனவாதத்தை அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும் ,ஏன் ராஜித அவ்வாறு கூறினார் எனின் கடந்த காலம்களில் ரவூப் ஹக்கீமின் கட்சி தாவல்கள்

    ReplyDelete

Powered by Blogger.