Header Ads



"எந்த பிரச்சினையாக இருந்தாலும் பரவாயில்லை, ஐக்கிய தேசியக் கட்சியே வெல்லும்"

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உட்பட ஏனைய கட்சிகள் எப்படியான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 மொத்த ஆசனங்களில் ஐக்கிய தேசியக் கட்சி 120 முதல் 125 வரையான ஆசனங்களை கைப்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் தாம் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பதை கூட தீர்மானிக்க முடியாதுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு மூன்று நாட்களே உள்ளன. இதனால் அவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை காணமுடிகிறத.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் பரவாயில்லை இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியே வெல்லும் எனவும் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.