Header Ads



முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காததற்கு மகிந்தவும், கோட்டபாயவும் காரணம் - எஸ்.பி.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்காமல் போனமைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோரே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் 50 சதவீதம் கிடைத்தது. முஸ்லிம் வாக்குகள் 4 சதவீதமே கிடைத்தது, இவ்வாறு எப்பொழுதும் குறைவடைந்தது இல்லை. இதற்கு காரணம் என்ன மகிந்தவும், கோட்டாவுமே என அவர் குறிப்பிட்டார். 

1 comment:

Powered by Blogger.