Header Ads



யு.எல்.எம்.ராசிக் காலமானார்

பிரபல சமூக சேவையாளரும், முன்னாள் போக்குவரத்து சபை உயரதிகாரியுமான அல்ஹாஜ் யு.எல்.எம்.ராசிக் நேற்று காலமானார். உக்குவளையைச் சேர்ந்த இவர் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன மத்திய மாகாண பணிப்பாளராகவும், தேசிய சம்மேளன உதவிச் செயலாளருமாகவும் பணிபுரிந்துள்ளார். 

பிரபல தொழிற்சங்கவாதியான இவர் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் உதவிச் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவரது ஜனாஸா நேற்றிரவு உக்குவளை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரது மறைவு குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்,

நீண்ட காலமாக சமூகப் பணி செய்த அல்ஹாஜ் ராசிக் முஸ்லிம் வாலிபர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கி தயார் படுத்துவதில் முக்கிய பங்காற்றியவராவார் எனத் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரும் இவரது மறைவு குறித்து அனுதாபச் செய்திகளை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.