Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு, ஹிருனிகாவின் நெத்தியடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,மஹிந்த ராஜபக்சவுடன், இணைந்ததனால் அவருக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கும் துரோகமிழைத்து விட்டதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர சாடியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் எவ்விதமான அரசியல் தீர்மானத்தை மேற்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான சிறிலங்கா சுதந்திரக் கட்சி முக்கிய உறுப்பினர்களுடன் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும், தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போவதில்லையெனவும், தற்போதைய அரசியல் கள நிலவரங்களைப் பொறுத்து வேறு ஒரு முன்னணியில் களமிறங்கவுள்ளதாகவும், இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது இது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.