Header Ads



வியாழக்கிழமை இரவு மகிந்தவை சந்தித்தேன் - ஒப்புக்கொண்டார் மைத்திரி

தான் கடந்த வியாழக்கிழமை இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சந்திப்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது கலந்துரையாடியவைகளை ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் எவ்வித சந்திப்புகளும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பிரிவினால் நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டிருந்தன. எனினும் எந்த ஒரு இடத்திலும் இவ்வாறான ஒரு சந்திப்புகள் இடம்பெறவில்லை என இரண்டு அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை.

No comments

Powered by Blogger.